Sponcer

Today's Quotes:

I speak truth: Follow Quotes on Facebook

21 October 2011

என்ன கொடுமை சரவணா? - பிரபு தேவா

பிரபுதேவாவுக்காக சினிமாவுக்கு முழுக்கு போட்டு திருமணத்துக்கு காத்திருக்கிறேன் எனக்கே துரோகம் செய்வதா என்று கேட்க, குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக கூறிவிட்டதாக செய்திகள் வெளிவந்தன.

அதுமட்டுமல்லாது கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு பிரபுதேவா சென்றதாகவும் நயந்தாரா பிரபுதேவாவை கண்டுகொள்ளவே இல்லை என்றும் போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் அதை எடுக்கவில்லை என்றும் மலையாள பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன.

இச்செய்திகளினால் இருவருக்கும் திருமணம் நடைபெறுவது
சந்தேகமே என்று தமிழ் திரையுலகில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் இச்செய்தி குறித்து நயன்தாரா கூறியிருப்பது " இச்செய்தியை பார்க்கும் போது நானும் பிரபுவும் சிரித்து விட்டோம். முந்தைய காலங்களை விட இப்போது தான் நானும் அவரும் மிகந்த சந்தோஷத்தில் இருக்கிறோம். பிரபு கடந்த சில மாதங்களாக இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார். நாங்கள் ஒன்றாக தான் இருக்கிறோம்.

அவருக்கு குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும். குழந்தைகள் எனக்கு பிரச்னை இல்லை. பிரபுதேவாவை விட்டு நான் பிரிய மாட்டேன்.

தொலைக்காட்சிகளில் TRP ரேட்டிங் உயர்த்துவதற்காகவும், பத்திரிகைகள் விற்பதற்காகவும் இவ்வாறு செய்திகளை பரப்பி வருகின்றன. இச்செய்திகளில் உண்மை இல்லை. எங்களது திருமண தேதி குறித்து அறிய ஆவலாக இருப்பவர்களுக்காக விரைவில் எங்களது திருமண தேதியை அறிவிப்போம்! " என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Share this

இந்த page - ஐ கண்டிப்பா படிங்க, புடிச்சு இருந்தா like பண்ணுங்க I love my Girl very much
Related Posts Plugin for WordPress, Blogger...