நாகார்ஜுன் நடிக்கும் பல படங்களில் நாயகி நடித்து வந்தார் அனுஷ்கா. அனுஷ்காவை தான் நாயகனாக நடித்த படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார் நாகார்ஜுனா.
அவ்வப்போது இருவரும் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் என்று செய்திகள் வந்து கொண்டு இருந்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நாகார்ஜுன் மகன் சைதன்யாவும் அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வலம் வர
ஆரம்பித்தன.
இந்நிலையில் இச்செய்திகள் குறித்து கோபமாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் நாகார்ஜுனா. அவர் கூறியிருப்பது :
"சினிமா துறையில் வெள்ளிவிழாவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். என்னோடு நடிக்கும் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து கிசு கிசு வந்து கொண்டே இருக்கிறது. முதலில் தபு, அனுஷ்கா, சார்மி, இப்போது பூனம் கவுர். பத்திரிகைகளில் இந்த செய்திகளைப் படித்துவிட்டு சிரிப்பதை தவிர வேறும் ஏதும் செய்வதில்லை. ஆனால், இவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள். அனுஷ்கா நடிகை என்பதைத் தாண்டி என் குடும்பத்தில் ஒருவர். என்னை விட என் மனைவி அமலாவிடம் தான் அதிகம் பேசுவார். சார்மியுடன் 'மாஸ்' படத்தில் நடித்தேன். அவர் சிறந்த நடிகை. ஏதாவது விஷயங்களில் என்னிடம் கருத்துக் கேட்பார். இந்த இடத்தில் வீடு வாங்க போகிறேன்.. என்ன நினைக்கிறீர்கள் என்றால், வாங்கு என்பேன். உடனே, நாகார்ஜுனா வீடு வாங்கி கொடுத்தார் என்று எழுதுகிறார்கள்.
இதே போல பூனர் கவுருடன் 'பயணம்' படத்தில் நடித்தேன். படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல ஒரு காட்சி கூட கிடையாது. ஆனால் எப்படித்தான் அவருடன் இணைத்து பேசுகிறார்களோ தெரியவில்லை. இப்படி எழுதுவதற்காக, நான் என் நட்பை நிறுத்திக்கொள்ள வேண்டியது இல்லை. நான் இப்போதும் அவர்களுடன் நட்பாகத்தான் இருக்கிறேன். இதையெல்லாம் கூட என்னால் விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், அனுஷ்காவுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இது அருவருப்பான ஜர்னலிஷம். இதுதான் என்னை ரொம்ப கோபப்படுத்தியது. அப்படியென்றால் இதுவரை நீங்கள் இதுபற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லையே என்கிறார்கள். இதற்கெல்லாம் நான் ஏன் கருத்துச் சொல்லவேண்டும். அது என் தகுதிக்கு குறைவானது. " என்று கூறியுள்ளார்.
அவ்வப்போது இருவரும் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் என்று செய்திகள் வந்து கொண்டு இருந்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நாகார்ஜுன் மகன் சைதன்யாவும் அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வலம் வர
ஆரம்பித்தன.
இந்நிலையில் இச்செய்திகள் குறித்து கோபமாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் நாகார்ஜுனா. அவர் கூறியிருப்பது :
"சினிமா துறையில் வெள்ளிவிழாவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். என்னோடு நடிக்கும் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து கிசு கிசு வந்து கொண்டே இருக்கிறது. முதலில் தபு, அனுஷ்கா, சார்மி, இப்போது பூனம் கவுர். பத்திரிகைகளில் இந்த செய்திகளைப் படித்துவிட்டு சிரிப்பதை தவிர வேறும் ஏதும் செய்வதில்லை. ஆனால், இவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள். அனுஷ்கா நடிகை என்பதைத் தாண்டி என் குடும்பத்தில் ஒருவர். என்னை விட என் மனைவி அமலாவிடம் தான் அதிகம் பேசுவார். சார்மியுடன் 'மாஸ்' படத்தில் நடித்தேன். அவர் சிறந்த நடிகை. ஏதாவது விஷயங்களில் என்னிடம் கருத்துக் கேட்பார். இந்த இடத்தில் வீடு வாங்க போகிறேன்.. என்ன நினைக்கிறீர்கள் என்றால், வாங்கு என்பேன். உடனே, நாகார்ஜுனா வீடு வாங்கி கொடுத்தார் என்று எழுதுகிறார்கள்.
இதே போல பூனர் கவுருடன் 'பயணம்' படத்தில் நடித்தேன். படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல ஒரு காட்சி கூட கிடையாது. ஆனால் எப்படித்தான் அவருடன் இணைத்து பேசுகிறார்களோ தெரியவில்லை. இப்படி எழுதுவதற்காக, நான் என் நட்பை நிறுத்திக்கொள்ள வேண்டியது இல்லை. நான் இப்போதும் அவர்களுடன் நட்பாகத்தான் இருக்கிறேன். இதையெல்லாம் கூட என்னால் விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், அனுஷ்காவுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இது அருவருப்பான ஜர்னலிஷம். இதுதான் என்னை ரொம்ப கோபப்படுத்தியது. அப்படியென்றால் இதுவரை நீங்கள் இதுபற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லையே என்கிறார்கள். இதற்கெல்லாம் நான் ஏன் கருத்துச் சொல்லவேண்டும். அது என் தகுதிக்கு குறைவானது. " என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment